• June 21, 2025
  • NewsEditor
  • 0

பிஹார்: பிஹாரில் இந்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், முதியோர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் விதவைகளுக்கு வழங்கப்படும் ஓய்வூதியம் ரூ.400-ல் இருந்து ரூ.1,100 ஆக அதிகரிக்கப்பட்டிருப்பதாக அம்மாநில முதல்வர் நிதிஷ் குமார் தெரிவித்துள்ளார்.

பிஹார் தேர்தல் இந்த ஆண்டு அக்டோபர் அல்லது நவம்பரில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தத் தேர்தலில் ஆர்ஜேடி- காங்கிரஸ் கூட்டணி, ஜேடியு- பாஜக கூட்டணி, ஜன் சுராஜ் என மும்முனை போட்டி நிலவும் என்றும் கணிக்கப்படுகிறது. தேர்தலுக்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது. அதோடு, என்டிஏ-வில் சரணடைந்துள்ள நிதிஷ் குமார், தனது முதல்வர் பதவியை தக்கவைத்துக் கொள்ள தீவிரமாக களப்பணி ஆற்றி வருகிறார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *