• June 21, 2025
  • NewsEditor
  • 0

பி.எஃப் பணம் உடனடியாக, எளிதாக சிக்கலின்றி கிடைக்க வேண்டுமா? அதற்கு KYC அப்டேட் அவசியம். இதற்காக இ.பி.எஃப்.ஓ அலுவலகத்திற்கு நடையாக நடக்க வேண்டிய அவசியமில்லை. ஆன்லைனிலேயே செய்துகொள்ளலாம்.

அந்த e-KYC-ஐ ஆன்லைனிலேயே செய்வதற்கான வழிமுறைகள் இதோ!

1. முதலில், EPFO வலைதளத்திற்குள் செல்லவும்.

2. அடுத்ததாக, உங்களது யுனிவர்சல் கணக்கு எண் (UAN), பாஸ்வோர்டு, கேப்ட்சா ஆகியவற்றை சரியாக உள்ளிடவும்.

3. இப்போது ஹோம் பேஜில் ‘Manage > KYC’ கிளிக் செய்யவும்.

பி.எஃப்

4. இப்போது திறந்திருக்கும் பக்கத்தில் பான், ஆதார், வங்கி தகவல்கள், பாஸ்போர்ட், டிரைவிங் லைசன்ஸ் போன்ற பல ஆப்ஷன்கள் காட்டும். இவற்றின் ஸ்கேன் செய்த ஆவணங்களை அப்லோட் செய்வதோடு, அங்கே கேட்கப்பட்டிருக்கும் தகவல்களை சரியாக பதிந்துவிடவும்.

குறிப்பு: இங்கே பதியப்படும் தகவல்கள் நீங்கள் அப்லோட் செய்யும் ஆவணங்களுடன் பொருந்திப் போகிறதா என்பதை ஒருமுறைக்கு, இருமுறை சரிபார்த்து கொள்ளுங்கள்.

5. நீங்கள் பதிந்திருக்கும் தகவல்களை ‘Save’ செய்யுங்கள். இப்போது உங்களது கணக்கு ‘Pending for Approval’ என்ற நிலைக்கு செல்லும்.

6. இனி நீங்கள் உள்ளீடு செய்துள்ள தகவல்களை உங்களது நிறுவனம் சரிபார்த்து ஒப்புதல் கொடுக்க வேண்டும். இது நடந்தப் பின், ‘Approved by Employer’ என்ற நிலைக்கு சென்றுவிடும்.

e-KYC அப்டேட்டைத் தொடங்குவதற்கு முன், செய்ய வேண்டியது என்ன?

  • உங்களது பான் எண்ணோடு ஆதார் இணைந்திருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

  • பான், ஆதார், வங்கி தகவல்கள், பாஸ்போர்ட், டிரைவிங் லைசன்ஸ் ஆகியவற்றின் ஸ்கேன் செய்த ஆவணங்களை குறிப்பிட்ட MBகளுக்குள் சரியாக வைத்துக்கொள்ளுங்கள்.

  • e-KYC அப்டேட்டிற்கு எந்தக் கட்டணமும் இல்லை. இதை நியாபகம் வைத்துகொள்ளுங்கள்.

  • நீங்கள் பதிவிட்டிருக்கும் தகவல்களுக்கும், ஆவணத்தில் உள்ள தகவல்களும் மாறுபட்டிருந்தால் உங்களது விண்ணப்பம் நிராகரிக்கப்படும். அதனால், பதிவிடும்போது கவனமாக இருக்க வேண்டும்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *