• June 21, 2025
  • NewsEditor
  • 0

ஜூன் 1-ம் தேதி மதுரையில் திமுக பிரம்மாண்ட பொதுக்குழு கூட்டத்தை கூட்டி முடித்த அடி மறைவதற்குள் பாஜக மையக் குழு நிர்வாகிகள் கூட்டத்தை அதே மதுரையில் கூட்டிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, “50 தொகுதிகளில் போட்டியிடுவதற்கான பாஜக வேட்பாளர்களை தயார் செய்யுங்கள்” எனச் சொல்லிச் சென்றிருக்கிறார். இதை மதுரையில் வைத்து சொல்லி இருப்பது தான் அரசியல் முக்கியத்துவம் பெறுகிறது.

அ​தி​முக – பாஜக கூட்​டணி இருப்​ப​தால் கொங்கு மண்​டலத்​தில் பாஜக-வுக்கு இயல்​பாகவே செல்​வாக்கு கூடி இருக்​கிறது. அதற்கு அடுத்​த​படி​யாக தென் மாவட்​டங்​களை குறிவைக்​கும் பாஜக, அதற்​காகவே தினகரனை​யும், ஓபிஎஸ்​ஸை​யும் முக்​குலத்​தோர் சமூகத்​தின் முகங்​களாக தங்​களது கூட்​ட​ணிக்​குள் இழுத்​துப் போட்டு வரு​கிறது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *