
மதுரை: பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்களுக்குப் பதிவேடுகள் கொள்முதல் செய்ததில் ரூ.1.75 கோடி முறைகேடு நடந்தது தொடர்பாக ஐஏஎஸ் அதிகாரிகள் காமராஜ், வள்ளலார் மீது வழக்குப் பதிய லஞ்ச ஒழிப்பு போலீஸாருக்கு உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டது.
தமிழகத்தில் 8,790 கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கங்களுக்கு 5 விதமான பதிவேடுகள் கொள்முதல் செய்ததில், கடந்த 2019-ல் ரூ.1.75 கோடி முறைகேடு நடந்திருப்பதாக தணிக்கை குழு அரசுக்கு அறிக்கை அளித்தது. இதுகுறித்து விசாரித்த லஞ்ச ஒழிப்பு போலீஸார், ஒப்பந்தம் எடுத்த தூத்துக்குடி கூட்டுறவு ஸ்டோர் மேலாளர் வெள்ளையம்மாள், அவரது கணவர் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தது.