
ராமேசுவரம்: நடுக்கடலில் மாயமான மண்டபம் மீனவரை ஹெலிகாப்டர் மற்றும் ரோந்து படகில் தேடும் பணி 2-வது நாளாக இன்றும் நடைபெற்றது.
ராமேசுவரம் அருகே மண்டபம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து சர்புதீன் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் அனீஸ் (30), மாதவன் (28), ஃபரித் (28), இப்ராஹிம் சா (40) ஆகிய 4 பேர் மீன்பிடிக்கச் கடலுக்கு சென்றுள்ளனர். ஜூன் 18ம் தேதி (புதன்கிழமை) நள்ளிரவில் நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது திடீரென சர்புதீனின் படகின் பக்கவாட்டுப் பலகை உடைந்து, விசைப்படகு கடலில் மூழ்கியுள்ளது.