• June 20, 2025
  • NewsEditor
  • 0

​காஞ்​சிபுரம் நகரத்​தின் நடுவே அமைந்​துள்ள மஞ்​சள் நீர் கால் வாய் நகரப்​பகுதி குடி​யிருப்​பு​களின் கழி​வுநீர் மற்​றும் மழைநீர் வடி​கால்​வா​யாக விளங்கி வரு​கிறது. ஒக்​கப்​பிறந்​தான் குளத்​திலிருந்து வெளி​யேறும் உபரிநீர், நகரத்​தின் நடுவே உள்ள விவசாயிகளின் பாசனத்​தேவையை பூர்த்தி செய்​து, நத்​தப்​பேட்டை ஏரியை சென்​றடை​யும் வகை​யில் மன்​னர்​கள் காலத்​தில் கட்டமைக்​கப்​பட்​ட​தாக தெரி​கிறது. எனினும், ஒக்​கப்​பிறந்​தான் குளத்​தின் ஆக்​கிரமிப்​பு​கள் காரண​மாக நீர்​வரத்து இன்​றி​யும் நகரின் பல்​வேறு பகு​தி​களில் இருந்து வெளி​யேற்​றப்​படும் சாயப்​பட்​டறை கழி​வுநீரும் இந்த கால்​வா​யில் வெளி​யேற்​றப்​பட்டு வருகிறது.

நகரப்​பகு​தி​யில் உள்ள குடி​யிப்​பு​களின் கழி​வுநீர் மற்​றும் சாலைகளில் தேங்​கும் மழைநீர் வெளி​யேறி நத்​தப்​பேட்டை ஏரியை சென்​றடைகிறது. இதனால், ஏரி​யின் நீர் மாசடைந்​துள்​ளது. இதனால், மஞ்​சள் நீர் கால்​வா​யில் கழி​வுநீர் மற்​றும் பிளாஸ்​டிக் கழி​வு​கள் கலப்​பதை தடுத்​து, கால்​வாயை சீரமைக்க வேண்​டும் என உள்​ளூர் மக்​கள் கோரிக்கை விடுத்​தனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *