• June 20, 2025
  • NewsEditor
  • 0

நண்பரின் இரங்கல் கூட்டத்தில் எம்.பி திருச்சி சிவா கண்ணீர் விட்டு அழுத வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.   

மறைந்த திமுக மூத்த நிர்வாகியும், எம்.பி திருச்சி  சிவாவின் நண்பருமான மிசா ராமநாதனின் புகழஞ்சலி கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய திருச்சி சிவா, “மாணவராக இருக்கும்போது  சிறைக்கு சென்றேன்.

மிசா ராமநாதன்

சிறை என்றால் என்னவென்று தெரியாதக் காலத்தில் என்னை அருகில் அமர வைத்து தைரியம் சொன்னவர் மிசா. ராமநாதன். எனக்கு வரும் வழியில் எல்லாம் அவரின் நினைவுகள்தான். ஒரே ஒரு ஆசை நிறைவேறவில்லை.

அந்த சிறைக்கு சென்று நாங்கள் இருந்த இடத்தை எல்லாம் பார்க்க வேண்டும் என்று நினைத்தோம். அது நிறைவேறவில்லை. என்ன சொல்வது என்று தெரியவில்லை. என் மேல் அன்பு வைத்திருப்பவர்கள் எல்லாம் ஒவ்வொருவராக இறந்து கொண்டிருக்கிறார்கள்.

திருச்சி சிவா
திருச்சி சிவா

எனக்கு கட்சிதான். கட்சியில் இருப்பவர்கள்தான் என்னுடைய அண்ணன், தம்பிகள்.  எனக்கு உடன் பிறந்தவர்கள் யாரும் இல்லை. தனியாக தவித்துக்கொண்டு இருப்பதுபோல் இருக்கிறது” என்று கூறி கண்ணீர் மல்க அழுதிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3PaAEiY

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *