
பெங்களூரு: நாட்டின் ஐடி தலைநகராக பெங்களூரு விளங்கி வருகிறது. இங்குள்ள தனியார் நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகள் சிலர், ஊழியர்களின் தினசரி வேலை நேரத்தை அதிகரிக்க வேண்டும் என்று கர்நாடக அரசுக்கு கடிதம் அனுப்பினர். அதன் அடிப்படையில், ஊழியர்களின் வேலை நேரத்தை 10 மணி நேரமாக உயர்த்த கர்நாடக அரசுமுடிவெடுத்துள்ளது. இதற்காக கர்நாடக தொழிலாளர் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது.
அதன்படி கர்நாடக கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் சட்டத்தின்படி, தினசரி வேலை நேரம் 9 மணி நேரமாக வரையறுக்கப்பட்டுள்ளது. கூடுதல் நேரம் (ஓவர் டைம்) வேலை பார்த்தாலும் ஒரு மணி நேரம் மட்டுமே பார்க்க வேண்டும். மூன்று மாதங்களில் அதிகபட்சமாக 50 மணி நேரம் மட்டுமே ஓவர் டைம் வேலை செய்ய அனுமதிக்க வேண்டும் என விதிமுறை வகுக்க‌ப்பட்டுள்ள‌து.