
லக்னோ: உத்தர பிரதேச்த்தில் உள்ள சர்வோதயா பள்ளி மாணவிகள் 25 பேர் நீட் தேர்வு எழுதியதில் 12 பேர் தேர்ச்சி பெற்று அசத்தியுள்ளனர். உ.பி.யின் மிர்சாபூர் மாவட்டம் மரிஹானில் உள்ள சர்வோதயா வித்யாலயாவைச் சேர்ந்த 25 மாணவிகள் கடினமான மருத்துவ நுழைவுத் தேர்வாக கருதப்படும் நீட் தேர்வை எழுதினர்.
இதில், கிட்டத்தட்ட பாதி பேர் அதாவது 12 மாணவிகள் ஒரே நேரத்தில் தேர்ச்சி பெற்று சாதித்து காட்டியுள்ளனர். இவர்கள் அனைவருமே சாதாரண குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்பது கூடுதல் சிறப்பு.