
புதுடெல்லி: சிறுவன் கடத்தப்பட்ட விவகாரத்தில் உயர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜரான ஏடிஜிபியை நீதிமன்றம் கைது செய்ய உத்தரவிட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது, இப்படியொரு அதிகாரம் இருப்பதாக தங்களுக்குத் தெரியவில்லை என்று தெரிவித்துள்ள உச்ச நீதிமன்ற நீதிபதிகள், ஏடிஜிபியின் இடைநீக்கத்தை ரத்து செய்வது தொடர்பாக தமிழக அரசு பதில் அளிக்குமாறு உத்தரவி்ட்டுள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு களாம்பாக்கத்தைச் சேர்ந்த தனுஷ்(23), தேனியைச் சேர்ந்த விஜயஸ்ரீ(21) ஆகியோர் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இதனால் ஆத்திரமடைந்த பெண் வீட்டார், தனுஷின் இளைய சகோதரரான 17 வயது சிறுவனை காரில் கடத்திச் சென்றனர்.