
மதுரை: முருகனின் அறுபடை வீடுகளில் பூஜை செய்து எடுத்து வரப்பட்ட வேல் மதுரையில் அமைக்கப் பட்டுள்ள மாதிரி அறுபடை வீடுகளில் பிரதிஷ்டை செய்யப் பட்டது. மதுரை பாண்டிகோயில் அருகே அம்மா திடலில் இந்து முன்னணி சார்பில் 22-ம் தேதி முருக பக்தர்கள் மாநாடு நடைபெறுகிறது. இதையொட்டி மாநாட்டு வளாகத்தில் முருகனின் அறுபடை வீடுகளின் மாதிரி கோயில்கள் அமைக்கப்பட்டுள் ளன. இங்கு பூஜைகள் செய்யப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படுகிறது.
நீண்ட வரிசையில் காத்திருப்பு: மதுரையில் ஒரே இடத்தில் அமைக்கப்பட்டுள்ள அறுபடை வீடுகளின் மாதிரியை தரிசிக்க மதுரை உட்பட பல்வேறு மாவட்டங்களிலிருந்து பக்தர்கள் வருகின்றனர். நேற்று பக்தர்களின் கூட்டம் அதிகமாக இருந்தது. பலர் குடும்பத்துடன் வந்து நீண்ட வரிசையில் காத்திருந்து அறுபடை முருகனை தரிசித்தனர். நேற்று வேல் பிரதிஷ்டை நடைபெற்றது.