• June 19, 2025
  • NewsEditor
  • 0

மதுரை / தூத்துக்குடி: திருச்​செந்​தூர் கோயில் கும்​பாபிஷேகத்​துக்கு தடை கோரிய மனுவை உயர் நீதி​மன்​றம் தள்​ளு​படி செய்​தது. திருச்​செந்​தூரைச் சேர்ந்த ராம்​கு​மார் ஆதித்​தன், உயர் நீதி​மன்ற மதுரை அமர்​வில் தாக்​கல் செய்த மனு​வில் கூறி​யிருப்​ப​தாவது: திருச்​செந்​தூர் சுப்​பிரமணிய சுவாமி கோயி​லில் ஜூலை 7-ம் தேதி கும்​பாபிஷேகம் நடை​பெறுகிறது. கோயில் திருப்​பணி​களுக்​காக அமைக்​கப்​பட்ட குழு​வில் ஆகம நிபுணர்​கள் இடம் பெற​வில்​லை. கடலோர கட்​டுப்​பாட்டு மண்​டலத்​துக்கு உட்​பட்ட பகு​தி​யில் உரிய அனு​மதி பெறாமல் கட்​டிடங்​கள்கட்​டப்​பட்​டுள்​ளன.

கோயிலில் 24 புனித தீர்த்​தங்​களில் நாழிக்​கிணறு என்ற தீர்த்​தம் மட்​டுமே தற்​போது உள்ளது. தீர்த்​தங்களின் பெயர்​களை குறிப்பிட்டு கல் தூண்​கள் அமைக்​கப்​பட்​டிருந்​தன. இந்த தூண்​கள் கோயில் திருப்​பணி​களின்​போது மறைக்​கப்​பட்​டுள்​ளன. இந்த கல் தூண்​களை மீண்​டும் நிறுவ வேண்​டும். கும்​பாபிஷேகத்​தின்​போது ஹெலி​காப்​டரில் மலர் தூவும் நிகழ்ச்​சிக்கு ஏற்​பாடு செய்​யப்​பட்​டுள்ளது. இதனால் கும்​பாபிஷேகத்​தின்​போது கருடன் வரு​வ​தில்​லை. ஹெலி​காப்​டரில் மலர் தூவும் நிகழ்​வுக்கு கோயில் நிதி செல​விடப்​படு​வது தவறு.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *