
சென்னை: சென்னையில் நடைபெற்ற ‘உடன்பிறப்பே வா’ சந்திப்பின்போது, கோவையில் அனைத்து தொகுதிகளையும் திமுக வசமாக்குவோம் என்று நிர்வாகிகள் முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் உறுதியளித்ததாக தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் அடுத்தாண்டு நடைபெற உள்ள சட்டப்பேரவை பொதுத்தேர்தலுக்கு ஆளும் திமுக பல்வேறு திட்டங்களுடன் தயாராகி வருகிறது. அதன் ஒருபகுதியாக, கடந்த ஜூன் 1-ம் தேதி மதுரையில் நடைபெற்ற பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட முடிவின்படி நிர்வாகிகளிடம் கருத்து கேட்கும் செயல்பாட்டை, ‘உடன்பிறப்பே வா’ என்ற தலைப்பில், கடந்த ஜூன் 13-ம் தேதி தொடங்கினார்.