• June 18, 2025
  • NewsEditor
  • 0

ஈரான் அணுஆயுதம் தயாரிப்பதாகக் குற்றம்சாட்டும் இஸ்ரேல், ஈரான் மீது தாக்குதல் நடத்தியது. அதற்கு பதிலடியாக ஈரானும் தாக்குதல் நடத்திவருகிறது. இந்த நிலையில், கனடாவில் நடைபெற்ற G7 உச்சிமாநாட்டில் ஜெர்மன் Chancellor பிரீட்ரிக் மெர்ஸ் கலந்துகொண்டார்.

அதைத் தொடர்ந்து அவர் ஒரு செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், “இஸ்ரேல் நம் அனைவருக்காகவும் மிக மோசமான வேலை செய்கிறது. ஈரான் ஆட்சியால் நாம் அனைவரும் பாதிக்கப்பட்டவர்கள்தான். இந்த முல்லா ஆட்சி உலகிற்கு மரணத்தையும் அழிவையும் கொண்டு வந்துள்ளது. கடந்த சில நாட்களில் இஸ்ரேலின் தாக்குதல்களால் ஈரான் தலைமை பலவீனமடைந்துள்ளது.

German Chancellor Friedrich Merz

அதன் முந்தைய பலத்துக்கும், வலிமைக்கும் ஈரான் திரும்புவது கடினம்தான். அதனால், ஈரானின் எதிர்காலம் நிச்சயமற்று இருக்கிறது. நாம் காத்திருந்து அதைப் பார்க்கலாம். ஈரான் பேச்சுவார்த்தைக்கு வரவில்லை என்றால், ஈரானின் அணு ஆயுதத் திட்டம் முழுமையான அழிவைச் சந்திக்க நேரிடும்.

ஈரானின் அணுசக்தி உள்கட்டமைப்பை அழிப்பதற்கான இராணுவத் திறன் இஸ்ரேலிடம் இல்லை என்றாலும், அமெரிக்காவிடம் இருக்கிறது. எனவே, இனி ஒரு மாற்றம் ஏற்பட்டால், ஜெர்மனி, பிரான்ஸ், ஐக்கிய நாடுகள் வழக்கத்தைப்போல் மீண்டும் இராஜதந்திர உதவியை வழங்கத் தயாராக இருக்கிறோம்” என்றார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *