
மதுரை: “கீழடி ஆய்வறிக்கையை ஏற்று அரசிதழில் பாஜக அரசு வெளியிடாவிட்டால் நாடாளுமன்றத்தை நடத்த விடாமல் ஸ்தம்பிக்கச் செய்வோம்” என திமுக துணைப் பொதுச் செயலாளர் திருச்சி சிவா எம்.பி மதுரையில் இன்று நடந்த ஆர்ப்பாட்டத்தில் எச்சரித்தார்.
மதுரையில் இன்று திமுக மாநில மாணவரணி சார்பில் கீழடி ஆய்வை அங்கீகரிக்க மறுக்கும் மத்திய பாஜக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் விரகனூர் சுற்றுச் சாலையில் நடைபெற்றது. இதற்கு மாநில மாணவரணி செயலாளர் ரா.ராஜீவ்காந்தி தலைமை வகித்தார். தங்கத் தமிழ்ச்செல்வன் எம்.பி, மாவட்டச் செயலாளர்கள் மணிமாறன், கோ.தளபதி எம்எல்ஏ ஆகியோர் முன்னிலை வகித்தனர்.