
சென்னை: சொத்து குவிப்பு வழக்கில் திமுக எம்.பி ஆ.ராசா உள்ளிட்டோர் மீது ஜூலை 23-ம் தேதி குற்றச்சாட்டு பதிவு செய்யப்படும் என சென்னை சிறப்பு நீதிமன்றம் அறிவித்துள்ளது.
நீலகிரி தொகுதி திமுக எம்.பி.யும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஆ.ராசா, வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவிப்பில் ஈடுபட்டதாகக் குற்றம்சாட்டி கடந்த 2015-ம் ஆண்டு சிபிஐ வழக்குப்பதிவு செய்தது.