
தேர்தலையொட்டி ஒவ்வொரு கட்சிக்குள்ளும் பல்வேறு களேபரங்கள் நடந்து வருகிறது. இதில் அதிமுகவில் எடப்பாடி-க்கோ, ஒருபக்கம் திமுக, இன்னொருபக்கம் பாஜக கூட்டணி, அடுத்து உட்கட்சி என சில நெருக்கடிகள் உள்ளன. பெரிதாக வெளியே தெரியவில்லை என்றாலும் உள்ளே ஓடிக்கொண்டு இருக்கிறது. இதை சரி செய்ய எடப்பாடி வகுக்கும் வியூகங்கள், அவர் முன்வைக்கப்பட்டிருக்கும் ஆப்ஷன்ஸ், டிப்ஸ், இதில் முக்கியமாக சி.வி சண்முகத்தை துணை முதலைச்சராக்க வேண்டும் என வன்னியர் சங்கங்களிடம் இருந்து வந்திருக்கும் கோரிக்கைகள் என பல பரபரப்புகள். இன்னொரு பக்கம் ராஜேந்திர பாலாஜியின் அரசியல் கேம். முக்கியமாக கௌதமியை வளரவிடாமல் முட்டுக்கட்டை போடுகிறாரா? என்றெல்லாம் கேள்விகள். என்ன நடக்கிறது அதிமுக-வில்?