• June 18, 2025
  • NewsEditor
  • 0

தென்காசி மக்களவை தொகுதியில் 2019-ல் தனது விசுவாசியான தனுஷ் எம்.குமாரை நிறுத்தி எம்பி-யாக்கினார் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் அண்ணாச்சி. தென்காசி மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சரான அண்ணாச்சி, அங்கே தனக்கென ஒரு ஆதரவு வட்டத்தை உண்டாக்குவதற்காக தனுஷ் எம்.குமாரை அடுத்த கட்டமாக தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் பதவிக்கு முன்னிறுத்தினார்.

ஆனால், உட்கட்சிக்குள் எழுந்த கடும் எதிர்ப்பு காரணமாக அந்த முயற்சி பலிக்காமல் போனது. இதையடுத்து தனுஷ் எம்.குமாருக்கு 2024-ல் மீண்டும் எம்பி சீட்டும் கிடைக்காமல் போனது. இருப்பினும் மனம் தளராத மனிதர், அடுத்ததாக அண்ணாச்சியின் அரவணைப்பில் வாசுதேவநல்லூர் தொகுதியில் போட்டியிட இப்போது சத்தமில்லாமல் காய்நகர்த்தி வருகிறார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *