
வேலூர்: மாணவர்கள் நடத்திய இந்தி எதிர்ப்பு போராட்டத்துக்கு திமுக ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது என்று பாமக தலைவர் அன்புமணி கூறினார்.
வேலூரில் நேற்று நடைபெற்ற பாமக பொதுக்குழுக் கூட்டத்தில் பங்கேற்ற கட்சித் தலைவர் அன்புமணி பேசியதாவது: பல்வேறு துறைகளிலும் தமிழகம் பின்னோக்கி சென்று கொண்டிருக்கிறது. மக்கள் விரோத திமுகவை அகற்ற வேண்டும்.