• June 18, 2025
  • NewsEditor
  • 0

ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்து, கடந்த 2022-ம் ஆண்டு வெளி​யான படம், ‘காந்​தா​ரா’. இந்​தப் படம் இந்​திய அளவில் பெரும் வரவேற்​பைப் பெற்​றது. இதையடுத்து இந்​தப் படத்​துக்கு முந்​தைய கதை​யாக ‘காந்​தா​ரா: சாப்​டர் 1’ என்ற படம் இப்​போது உரு​வாகி வரு​கிறது. இதன் படப்​பிடிப்பு கடந்த சில நாட்​களுக்கு முன் ஷிவ​மோகா மாவட்​டத்​தின் மாணி நீர்த்​தேக்​கத்​தில் நடந்​தது.

ரிஷப் ஷெட்​டி​யுடன் 30 பேர் கொண்ட குழு படப்​பிடிப்​புக்​காகச் சென்​ற​போது, படகு கவிழ்ந்​தது என்​றும் ஆழமற்ற பகு​தி​யில் கவிழ்ந்​த​தால் அதிர்​ஷ்ட​வச​மாக அனை​வரும் உயிர் தப்​பிய​தாக​வும் கேமரா உள்​ளிட்ட உபகரணங்​கள் நீரில் மூழ்கி சேதமடைந்​த​தாக​வும் செய்​தி​கள் வெளி​யானது. இதனால் படப்​பிடிப்பு நிறுத்​தப்​பட்​ட​தாக​வும் கூறப்​பட்​டது. ஆனால், படக்​குழு​வினர் இதை மறுத்​துள்​ளனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *