
புதுச்சேரி: புதிய கல்விக் கொள்கையை ஏற்காத அனைத்து மாநிலங்களும், மறுபரிசீலனை செய்து, அதை ஏற்க வேண்டும் என்று குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் கூறினார்.
புதுச்சேரியில் உள்ள மத்திய பல்கலைக்கழகத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: இந்தியா எழுச்சி பெறும் நேரம் உருவாகியுள்ளது. தேசிய நலன் மற்றும் தேசிய வளர்ச்சிக்கு அரசியல்வாதிகள் செவிசாய்க்காவிட்டால், நமது சவால்கள் சிக்கலாகிவிடும்.