
சென்னை: சிறுவன் கடத்தல் விவகாரத்தில் கைதான ஏடிஜிபி எச்.எம்.ஜெயராம் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இதற்கிடையே, பூவை ஜெகன் மூர்த்தியிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.
திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு களாம்பாக்கத்தைச் சேர்ந்த 17 வயது சிறுவன் கடத்தப்பட்ட விவகாரத்தில் உயர் நீதிமன்ற உத்தரவுபடி ஏடிஜிபி எச்.எம்.ஜெயராம் கைது செய்யப்பட்டார். அவரை திருவாலங்காடு காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்ற போலீஸார், தொடர்ந்து விசாரணை நடத்தினர். நேற்று மாலை 5.45 மணியளவில் விசாரணை நிறைவு பெற்றது. பின்னர் ஜெயராம் வீட்டுக்குத் திரும்பினார்.