
சென்னை: பாஜக, அதிமுக கூட்டணி தேமுதிகவுக்காக எதுவும் செய்யவில்லை என்றும் எனவே 2026 சட்டப்பேரவை தேர்தலில் மிகவும் வலுவான கூட்டணியை தேமுதிக அமைக்க வேண்டும் எனவும் அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதாவுக்கு நிர்வாகிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தேமுதிகவில் புதிதாக நியமிக்கப்பட்ட சட்டப்பேரவை தொகுதி பொறுப்பாளர்கள், மாவட்ட செயலாளர்கள், மண்டல பொறுப்பாளர்கள், தொகுதி கண்காணிப்பாளர்கள் உடனான மண்டலவாரியான கூட்டம் சென்னையில் 3-வது நாளாக நேற்றும் நடைபெற்றது.