
மதுரை முருக பக்தர்கள் மாநாட்டுக்கு வரும் வாகனங்களுக்கு இ-பாஸ் வழங்க மறுத்த உயர் நீதிமன்றம், ஜூன் 21 காலை 10 மணி வரை வாகன பாஸ் கேட்டு விண்ணப்பிக்கலாம் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மதுரை வண்டியூரை சேர்ந்த அரசு பாண்டி, உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனு: மதுரை வண்டியூர் அருகே அம்மா திடலில் ஜூன் 22-ல் முருக பக்தர்கள் ஆன்மிக மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டுக்கு அனுமதி வழங்கும்போது காவல்துறை 50-க்கும் மேற்பட்ட நிபந்தனைகளை விதித்துள்ளது.