• June 17, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: நூறாவது வயதில் அடி​யெடுத்து வைத்​திருக்​கும் காந்​திய போராளி கிருஷ்ணம்​மாள் ஜெக​நாதனுக்கு மக்​கள் நீதி மய்​யம் தலை​வர் கமல்​ஹாசன் வாழ்த்து தெரி​வித்​துள்​ளார். தாழ்த்​தப்​பட்ட மக்​களின் நலனுக்​காக தன் வாழ்க்​கையை அர்ப்​பணித்​தவரும், காந்​திய போராளி​யு​மான கிருஷ்ணம்​மாள் ஜெக​நாதன் நேற்று 100-வது வயதில் அடி​யெடுத்து வைத்​தார். இதை யொட்டி அவருக்கு மநீம தலை​வர் கமல்​ஹாசன் பிறந்​த​நாள் வாழ்த்து தெரி​வித்​துள்​ளார்.

இது தொடர்​பாக சமூக வலைதளத்​தில் கமல்​ ஹாசன் நேற்று வெளி​யிட்ட வாழ்த்​துச் செய்​தி​யில் கூறி​யிருப்​ப​தாவது: காந்​தி​யம் என்​னும் கருத்​தாக்​கத்​துக்கு உரு​வ​மாய் இன்று நம் கண்​முன் நிற்​கும் பெருந்​தகை​யாளர் கிருஷ்ணம்​மாள் ஜெக​நாதன். சட்​டரீ​தி​யான போராட்​டங்​களால், செயல்​பாடு​களால் லட்​சக்​கணக்​கான எளிய மக்​களுக்கு வாழ்​வா​தா​ரம் பெற்​றுத் தந்த காந்​தி​யர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *