
சென்னை: காவல்துறையில் பணியாற்றும் காவலர்களின் பதவி உயர்வுக்கான காலவரம்பை குறைத்து தமிழக அரசு பிறப்பித்துள்ள அரசாணையால், 37 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவலர்களுக்கு பதவி உயர்வு கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘காவல்துறையில் பணியாற்றும் காவலர்களின் பதவி உயர்வுக்கான காலவரம்பை குறைத்து தமிழக அரசு பிறப்பித்துள்ள அரசாணையால், 37 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவலர்களுக்கு பதவி உயர்வு கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. அனைத்துக் காவலர்களும் பயனடையும் வகையில், பதவி உயர்வு வழங்கப்படும் என்று வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்த திமுக, இப்போது அதற்கு எதிராக செயல்படுவது கண்டிக்கத்தக்கது.