
சென்னை: “பண்ருட்டி அருகே 80 வயது மூதாட்டி பாலியல் வன்கொடுமைக்கு ஆளானது கொடுமையிலும் கொடுமை. இதனால் பெண்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மாலையில் நடைபயிற்சி சென்ற மூதாட்டியிடம் மது போதையில் இருந்த 4 பேர் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டது மிகவும் வேதனைக்குரியது,” என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “தமிழ்நாட்டில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்துக்கொண்டே போவது மிகவும் வருத்தத்துக்குரியது. இதற்கு காரணம் தமிழக அரசின் செயலற்ற ஆட்சியே. கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே 80 வயது மூதாட்டி பாலியல் வன்கொடுமைக்கு ஆளானது கொடுமையிலும் கொடுமை. இதனால் பெண்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.