
சென்னை: பாத யாத்திரை மேற்கொண்டு வரும் அரசு மருத்துவர்களின் நியாயமான கோரிக்கைகளை காலம் தாமதிக்காமல் நிறைவேற்றிட அரசு முன்வர வேண்டும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் தனது வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில்: "அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மருத்துவர்கள், செவிலியர்கள் நியமனம், ஊதிய உயர்வு, கரோனா பேரிடர் தொற்று காலத்தில் உயிரிழந்த அரசு மருத்துவர் விவேகானந்தனின் மனைவிக்கு நிவாரணம் மற்றும் அரசு வேலை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு மருத்துவர்கள் சேலம் மாவட்டம் மேட்டூரில் இருந்து சென்னையை நோக்கி பாதயாத்திரை நடத்தி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.