• June 17, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: இயந்​திர கோளாறு ஏற்​பட்​ட​தால் லண்​டன் – சென்னை – லண்​டன் விமான சேவை திடீரென்று ரத்து செய்​யப்​பட்​டது. சென்னை – லண்​டன் – சென்னை இடையே பிரிட்​டிஷ் ஏர்​வேஸ் விமான நிறு​வனம், தினசரி விமான சேவை​களை இயக்கி வருகிறது. இந்த விமானத்​தில், லண்​டன் பயணி​கள் மட்​டுமின்றி நெதர்​லாந்​து, ஸ்காட்​லாந்​து, பிரான்​ஸ், ஸ்வீடன் உள்​ளிட்ட பல்​வேறு நாடு​களுக்கு செல்​லும் பயணி​களும் பயணிக்​கின்​றனர்.

அதனால், இந்த விமானத்​தில் எப்​போதும் பயணி​கள் கூட்​டம் அதி​கமாக இருக்​கும். லண்​டனிலிருந்து புறப்​படும் பிரிட்​டிஷ் ஏர்​வேஸ் விமானம் அதி​காலை 3.30 மணிக்கு சென்னை வந்​து​விட்​டு, பின்​னர் சென்​னையி​லிருந்து அதி​காலை 5.35 மணிக்கு லண்​ட​னுக்கு புறப்​பட்டு செல்​வது வழக்​கம். அதன்​படி, நேற்று முன்​தினம் இரவு லண்​டனிலிருந்து 360 பயணி​களு​டன் சென்​னைக்கு புறப்​பட்ட பிரிட்​டிஷ் ஏர்​வேஸ் விமானம், நடு​வானில் பறக்​கத் தொடங்​கிய சிறிது நேரத்​தில் இயந்​திரக் கோளாறு ஏற்​பட்​டது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *