
சென்னை: இயந்திர கோளாறு ஏற்பட்டதால் லண்டன் – சென்னை – லண்டன் விமான சேவை திடீரென்று ரத்து செய்யப்பட்டது. சென்னை – லண்டன் – சென்னை இடையே பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமான நிறுவனம், தினசரி விமான சேவைகளை இயக்கி வருகிறது. இந்த விமானத்தில், லண்டன் பயணிகள் மட்டுமின்றி நெதர்லாந்து, ஸ்காட்லாந்து, பிரான்ஸ், ஸ்வீடன் உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு செல்லும் பயணிகளும் பயணிக்கின்றனர்.
அதனால், இந்த விமானத்தில் எப்போதும் பயணிகள் கூட்டம் அதிகமாக இருக்கும். லண்டனிலிருந்து புறப்படும் பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் அதிகாலை 3.30 மணிக்கு சென்னை வந்துவிட்டு, பின்னர் சென்னையிலிருந்து அதிகாலை 5.35 மணிக்கு லண்டனுக்கு புறப்பட்டு செல்வது வழக்கம். அதன்படி, நேற்று முன்தினம் இரவு லண்டனிலிருந்து 360 பயணிகளுடன் சென்னைக்கு புறப்பட்ட பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம், நடுவானில் பறக்கத் தொடங்கிய சிறிது நேரத்தில் இயந்திரக் கோளாறு ஏற்பட்டது.