
திருப்பதி: மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் பியூஷ் கோயல் நேற்று காலை தனது குடும்பத்தினருடன் திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்தார். பின்னர் திருச்சானூர் பத்மாவதி தாயாரை பியூஷ் கோயல் தரிசனம் செய்துவிட்டு கிருஷ்ணப்பட்டினம் துறைமுகத்திற்கு செல்வதற்கு தயாரானார்.
அப்போது அவர் செல்லவிருந்த ஹெலிகாப்டரில் கோளாறு ஏற்பட்டதால், தனது பயணத்தை ரத்து செய்துவிட்டு தனது குடும்பத்தாருடன் விமானத்தில் டெல்லி புறப்பட்டுச் சென்றார்.