• June 17, 2025
  • NewsEditor
  • 0

புதுடெல்லி: சிந்து நதி​களின் நீரை பஞ்​சாப், ஹரி​யா​னா, ராஜஸ்​தானுக்கு திருப்ப புதிய திட்​டம் தீட்​டப்​பட்டு உள்​ளது. இதற்​காக 113 கி.மீ. தொலை​வுக்கு கால்​வாய் அமைக்க முதல்​கட்ட ஆய்வு மேற்​கொள்​ளப்​பட்டு வரு​கிறது. சிந்து நதி கட்​டமைப்​பில் சிந்​து, ஜீலம், செனாப், ரவி, பியாஸ், சட்​லஜ் ஆகிய 6 நதி​கள் உள்​ளன.

இந்த நதி கட்​டமைப்பு நீரை பகிர்ந்து கொள்​வது தொடர்​பாக கடந்த 1960-ம் ஆண்​டில் இந்​தி​யா, பாகிஸ்​தான் இடையே ஒப்​பந்​தம் கையெழுத்​தானது. இதன்​படி கிழக்கு பகு​தி​யில் பாயும் ரவி, பியாஸ், சட்​லஜ் ஆகிய 3 நதி​களின் நீரை இந்​தியா பயன்​படுத்தி வரு​கிறது. இதன்​மூலம் பஞ்​சாப், ஹரி​யானா மாநிலங்​கள் பலன் அடைகின்​றன. மேற்கு பகு​தி​யில் பாயும் சிந்​து, ஜீலம், செனாப் ஆகிய 3 நதி​களின் நீரை பாகிஸ்​தான் பயன்​படுத்தி வந்​தது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *