• June 17, 2025
  • NewsEditor
  • 0

கோவை மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்றத் தொகுதிகளையும் தற்போது அதிமுக கூட்டணி தன்வசத்தில் வைத்திருக்கிறது. இந்த பத்திலும் இம்முறை திமுக கூட்டணியை ஜெயிக்க வைக்க வேண்டும் என்பதற்காகவே முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை கோவையில் உட்கார வைத்திருக்கிறது திமுக தலைமை. பாஜக எம்எல்ஏ-வான வானதி சீனிவாசனின் கோவை தெற்கு தொகுதியையும், முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் தொண்டாமுத்தூர் தொகுதியையும் இம்முறை கட்டாயம் கைப்பற்றியே ஆகவேண்டும் என்பதும் செந்தில் பாலாஜிக்கு தரப்பட்டுள்ள முக்கியமான அசைன்மென்ட் என்கிறார்கள்.

தொண்​டா​முத்​தூர் தொகு​தி​யில் எஸ்​.பி.வேலுமணிக்கு எதி​ரான இழுப்பு வேலை​களை செந்​தில் பாலாஜி ஏற்​கெனவே தொடங்​கி​விட்ட நிலை​யில், கோவை தெற்​கில் இம்​முறை திமுக-வே போட்​டி​யிட வேண்​டும் என்ற கோரிக்​கையை முன்​வைக்க ஆரம்​பித்​திருக்கிறார்​கள் உடன்​பிறப்​பு​கள். கடைசி​யாக 2011-ல் கோவை தெற்​கில் திமுக போட்​டி​யிட்​டது. அப்​போது இங்கு களம்​கண்ட முன்​னாள் அமைச்​சர் பொங்​கலூர் பழனி​சாமி, அதி​முக-​வின் சேலஞ்​சர் துரை​சாமி​யிடம் தோற்​றுப் போனார். இதனால், 2016, 2021 தேர்​தல்​களில் இந்​தத் தொகு​தியை காங்​கிரஸ் கட்​சிக்கு கொடுத்​து​விட்டு ஒதுங்​கிக் கொண்​டது திமுக. இந்த இரண்டு தேர்​தல்​களி​லுமே காங்​கிரஸ் கட்​சி​யின் அகில இந்​திய செய​லா​ள​ரான மயூரா எஸ்​.ஜெயக்​கு​மார் இங்கு போட்​டி​யிட்​டார். இரண்டு முறை​யும் அவரால் கரை சேர​முடிய​வில்​லை.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *