
சவுதி அரேபியாவின் இளவரசர் அல்-வலீத் பின் கலீத் பின் தலால், “தூங்கும் இளவரசர்” என்று பிரபலமாக அறியப்படுகிறார். அதற்கு காரணம் அவர் 20 ஆண்டுகளாக கோமாவில் உள்ளார்.
2005 ஆம் ஆண்டு நடந்த ஒரு கார் விபத்தைத் தொடர்ந்து 20 ஆண்டுகளாக இளவரசர் அல்-வலீத் கோமாவில் உள்ளார். இதற்கிடையில் அரச குடும்ப உறுப்பினர் ஏப்ரல் 18, 2025 அன்று அவரது 36 வது பிறந்தநாளைக் கொண்டாடினார்.
இந்தப் பிறந்தநாள் கொண்டாட்டத்துக்குப் பிறகு ‘தூங்கும் இளவரசர்’ என்று அவரது புகைப்படங்கள் மீண்டும் வைரலானது.
இந்தநிலையில் இளவரசர் விழித்தெழுந்து தனது குடும்பத்துடன் மீண்டும் இணைவதை காண்பிக்கும் வீடியோ ஒன்று, சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.
உண்மை என்ன?
வைரலாகும் வீடியோவில் அந்த இளவரசர் இடம்பெறவில்லை. அதற்கு பதிலாக, சவுதி அரேபியாவின் தொழிலதிபரான யாசீத் முகமது அல்-ராஜ்ஹி இடம்பெறுகிறார்.
”20 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு கோர விபத்தில் சிக்கிய சவுதியின் தூங்கும் இளவரசர் இறுதியாக மீண்டும் உயிர் பெற்றார், அவரை விட்டுக்கொடுக்க மறுத்த தந்தைக்கு நன்றி” என்று கூறிய வீடியோவில் இளவரசர் இல்லை, அவருக்கு பதிலாக அதில் காணப்படுபவர் யாசீத் முகமது அல்-ரஜ்ஹி ஆகும்.
இவர் சமீபத்தில் பாஜா ஜோர்டான் பந்தயத்தின் கார் விபத்தில் காயமடைந்தார். பின்னர் குணமடைந்த அவர் தனது அன்புக்குரியவர்களுடன் உரையாடுவதைக் காட்டும் பல வீடியோக்கள் பகிரப்பட்டன. இந்த நிலையில் தான் “ஸ்லீப்பிங் பிரின்ஸ்” கதையுடன் இந்த வீடியோவை தவறாக இணைத்து, அதனை இணையதளத்தில் வைரல் செய்து வருகின்றனர்.
இளவரசருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கடந்த இருபது வருடங்களாக வென்டிலேட்டர் உதவியுடன் வாழ்ந்துவரும் இளவரசருக்கு உணவு குழாய் மூலம் உணவளிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Prince Al-Waleed bin Khaled bin Talal of Saudi Arabia known as the “Sleeping Prince” who has been in a coma since a car accident in 2005 has finally woken up. #Iran #Nuclear #Gaza pic.twitter.com/m1lfnmDZ1v
— IMJA Lifestyle (@imjalifestyle) June 14, 2025