
அடுத்த நிதியாண்டில், 24 பெட்டிகளை கொண்ட தூங்கும் வசதி (ஸ்லீப்பர்) வந்தே பாரத் ரயில்கள் தயாரிப்பு பணியைத் தொடங்க சென்னை ஐசிஎஃப் திட்டமிட்டுள்ளது.
உலகப் புகழ்பெற்ற ரயில் பெட்டி தயாரிப்பு தொழிற்சாலைகளில் ஒன்றாக சென்னை பெரம்பூர் ஐ.சி.எஃப். தொழிற்சாலை திகழ்கிறது. இங்கு பல்வேறு வகைகளில் 73 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரயில் பெட்டிகள் தயாரித்து வழங்கப்பட்டுள்ளன. இந்திய ரயில்வேக்கு மட்டுமின்றி பல்வேறு வெளிநாடுகளுக்கும் ரயில் பெட்டிகள் தயாரித்து வழங்கப்படுகின்றன.