
பொதுமக்களின் குறைகளை தீர்க்கும் வகையில் தமிழகம் முழுவதும் ஜூலை 15-ம் தேதி முதல் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்கள் நடத்தப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
தஞ்சாவூர் மன்னர் சரபோஜி அரசு கலைக் கல்லூரி மைதானத்தில் நேற்று நடைபெற்ற விழாவில், முதல்வர் ஸ்டாலின் கலந்துகொண்டு, ரூ.325.96 கோடி மதிப்பிலான 2,461 முடிவுற்ற பணிகளை திறந்து வைத்தார். ரூ.309.48 கோடி மதிப்பிலான 4,127 புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். 2.25 லட்சம் பேருக்கு ரூ.558.43 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.