
சென்னை: கிரிமினல்களுக்கு அடைக்கலம் தரும் கட்சி பாஜக என்றும், முருகன் பெயரை சொல்லி தமிழக மக்களை ஏமாற்ற முடியாது என்றும் அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
திமுக சார்பில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்தநாளை முன்னிட்டு, நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி சென்னை கொரட்டூரில் நேற்று நடைபெற்றது. சட்டத்துறை அமைச்சர் ரகுப்தி நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கி 15 கருணை இல்லங்களுக்கு ஒரு மாதத்துக்கு தேவையான மளிகை பொருட்கள் மற்றும் உபகரணங்களை வழங்கினார்.