• June 16, 2025
  • NewsEditor
  • 0

2025 ஜூன் 27-ம் தேதி பரமக்குடி முத்தாலம்மன் கோயிலில் மாலை 6 மணி அளவில் சக்தி விகடன் வழங்கும் திருவிளக்கு பூஜை நடைபெற இருக்கிறது. இதில் நீங்களும் கலந்து கொள்ளலாம். அதுகுறித்த விவரங்கள் உங்களுக்காக…

முன்பதிவுக்கு: 044-66802980/07

முன்பதிவு செய்ய இங்கே க்ளிக் செய்யவும்!

பரமக்குடி முத்தாலம்மன் விளக்கு பூஜை

பரமன் குடி கொண்ட ஊர் இது என்பதால் இவ்வூர் பரமன் குடியானது என்கிறது தலவரலாறு. மீனாட்சி கல்யாணத்தின்போது ஈசன் இங்கே தங்கியிருந்தார் என்பதும் ஒரு தகவல். இதே ஊரில் வையைக்கரை ஓரத்தில் காவல் நாயகியாக அமர்ந்திருக்கிறாள் அன்னை முத்தாலம்மன். சுமார் 1000 ஆண்டுகள் பழமையானது இந்த ஆலயம். தல விருட்சம் கடம்ப மரம், தீர்த்தம் வைகை ஆறு. பரமக்குடி வைகைப் பாலம் அருகே மார்க்கெட் பகுதியில் நகருக்கு நடுவே இந்த அமைந்துள்ளது. கருவறையில் முத்தால பரமேஸ்வரி, கனிவே உருவாக தாமரை பீடத்தில் அமர்ந்திருக்கிறாள். எதிரே சிம்ம வாகனம் இருக்கிறது. சூலம், கபாலம், கட்கம், டமருகம் ஆகிய ஆயுதங்களை நான்கு கரங்களில் ஏந்தியுள்ளாள். கல்வி-கலைகளில் சிறந்து விளங்கவும், வாழ்வின் கஷ்டங்கள் நீங்கவும் இவளுக்கு விசேஷ பால் அபிஷேகம் செய்து, சர்க்கரைப்பொங்கல் படைத்து வேண்டிக்கொள்கிறார்கள். வெள்ளிக்கிழமைகளில் இவளுக்கு விசேஷ பூஜை செய்யப்படுகிறது. பங்குனியில் பிரம்மோற்ஸவ விழா, மாசி, பங்குனியில் பூச்சொரிதல் விழாக்கள் இங்கு விசேஷம்.

முற்காலத்தில் இப்பகுதி மன்னன் ஒருவன் வித்தியாசமான ஒரு போட்டியை வைத்தானாம். கையால் தொடாமலேயே முத்துக்களை மாலையாக தொடுக்க வேண்டும் என்பதே அது. பலரு முயன்றும் முடியாமல் போனது. அப்போது ஒரு சிறுபெண் முன்வந்து கலந்து கொண்டாள். முத்துக்களை வரிசையாகத் தொடுத்து மறுபக்கம் வெல்லப் பாகு தடவிய நூலை வைத்தாள். வெல்ல வாசனைக்கு மயங்கிய எறும்புகள், முத்துக்களின் துளை வழியே சென்று, நூலை இழுந்து வந்தன. இறுதியில் அது மாலையானது. அந்த பெண்ணை பாராட்டிய அரசன் அவளையே மணக்க விரும்பினான். அப்பெண் மறுக்க, அரசன் கட்டாயப்படுத்தினான். இதனால் வெகுண்ட அப்பெண் தீக்குளித்து உயிரை விட்டாள். மறைந்ததும் தெய்வத்தன்மைக்கு அப்பெண்ணுக்கு கோயில் உருவானது. முத்துமணி மாலை கோர்த்தவள் என்பதால் இவளே அன்னை முத்தால பரமேஸ்வரி’ என்றானாள் என்கிறது தலவரலாறு.

பெருமைகள் பல கொண்ட இந்த அன்னை வேண்டிய வரங்களைக் கொடுப்பவள் என்பதால் இங்கே எப்போதும் கூட்டம் நிரம்பி வழியும். எண்ணியவற்றை விரைவிலேயே நிறைவேற்றும் இந்த இந்த சிறப்பான ஆலயத்தில் உங்கள் சக்தி விகடன் 2025 ஜூன் -27-ம் தேதி மாலை 6 மணி அளவில் திருவிளக்கு பூஜை நடத்த இருக்கிறது. இதில் நீங்களும் கலந்து கொள்ளலாம். அன்னை முத்தாலம்மன் அருளால் வளமும் நலமும் பெற்றவர்கள் அநேகம். எனவே உலக நன்மைக்காகவும் தனிப்பட்ட துயர் நீங்கவும் பிரார்த்தனை செய்ய உகந்த வழிபாடு திருவிளக்கு வழிபாடு. அந்த அற்புதமான வழிபாட்டில் கலந்துகொள்ள வாசகிகளான உங்களையும் அழைக்கிறோம்.

முன்பதிவுக்கு: 044-66802980/07

முன்பதிவு செய்ய இங்கே க்ளிக் செய்யவும்!

பரமக்குடி முத்தாலம்மன் விளக்கு பூஜை

கலந்துகொள்ளும் வாசகியர் கவனத்துக்கு:

விளக்குப் பூஜையில் கலந்துகொள்ளும் வாசகர், விளக்கு, விளக்கை வைப்பதற்கான தட்டு, மணி, பஞ்சபாத்திரம், உத்தரணி, கற்பூர ஆரத்தித் தட்டு ஆகியவற்றை எடுத்து வந்தால் போதுமானது. மற்றபடி பூஜைக்குத் தேவையான திரி, எண்ணெய், தாம்பூலப் பொருள்கள், நைவேத்தியம் முதலானவற்றை நாங்களே வழங்குகிறோம்.

அற்புதமான இந்த விளக்குப் பூஜையில் கலந்துகொள்ள விரும்பும் வாசகியர் இங்கு தரப்பட்டுள்ள link-ஐ பயன்படுத்தி உரிய விவரங்களைப் பூர்த்தி செய்து முன்பதிவு செய்யலாம் அல்லது கீழ்க்காணும் எண்ணில் தொடர்பு கொண்டு, உங்கள் பெயர், முகவரி, தொலைபேசி எண் விவரங்களுடன் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

முன்பதிவுக்கு: 044-66802980/07

முன்பதிவு செய்ய இங்கே க்ளிக் செய்யவும்!

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *