
ஈரான் மீது இஸ்ரேல் ‘முன்னெச்சரிக்கை தாக்குதல்’ நடத்த தொடங்கி இன்றோடு நான்கு நாள் ஆகிறது. இந்தத் தாக்குதலுக்கு எதிர்வினையாக ஈரானும் இஸ்ரேல் மீது ஏவுகணை மற்றும் டிரோன் தாக்குதல்களை பொழிந்து வருகிறது.
இந்த நிலையில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப், ‘இந்தியா, பாகிஸ்தானைப் போல, இஸ்ரேல், ஈரானையும் ஒப்பந்தம் மேற்கொள்ள செய்வேன்’ என்று தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
ஆனால் ஈரானோ, ‘இஸ்ரேலின் முன்னெச்சரிக்கை தாக்குதலுக்கு பதிலடி கொடுத்தப்பின் தான், நாங்கள் பேச்சுவார்த்தைக்கு வருவோம்’ என்று இஸ்ரேல் – ஈரான் தாக்குதலில் மத்தியஸ்தம் செய்யும் ஓமன் மற்றும் கத்தாரிடம் திட்டவட்டமாக தெரிவித்திருக்கிறது.
இந்த நான்கு நாள்கள் தாக்குதலில், இஸ்ரேலில் குறைந்தபட்சம் 230 பேர் உயிரிழந்திருப்பார்கள். இதில் 90 சதவிகிதம் பேர் சாதாரண மக்கள் என்று ஈரானின் சுகாதரத் துறை கூறியுள்ளது.
இஸ்ரேலில் ஈரானின் தாக்குதலால் கிட்டத்தட்ட 10 பேர் உயிரிழந்திருக்கிறார்கள் என்று இஸ்ரேல் தெரிவித்துள்ளது. இதில் குழந்தைகளும் அடக்கம்.
ஈரானுக்கு ஆதரவாக நேற்று ஏமனின் ஹவுத்திகளும் களம் இறங்கியிருந்தார்கள்.
ஈரானின் அணு ஆயுதத் திட்டத்திற்கு சம்பந்தமான இடங்களில் தான் இஸ்ரேல் பெரும்பாலும் குறிவைத்து இருந்தது. இதற்கு எதிர்வினையாக இஸ்ரேலில் ராணுவ தளவாடங்கள் மீது ஈரான் குறி வைத்து தாக்கி வருகிறது.
இந்தத் தாக்குதல்கள் விரைவில் முடிவுக்கு வந்தால் இஸ்ரேல், ஈரானுக்கு மட்டுமல்ல… மற்ற உலக நாடுகளுக்கும் நன்மை!