
போபால்: சிந்து நதி நீரின் ஒவ்வொரு துளிக்காகவும் பாகிஸ்தான் ஏங்க வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். அமைச்சர்கள், எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்களுக்கான 3 நாள் பயிற்சி கூட்டத்துக்கு மத்தியப் பிரதேச பாஜக ஏற்பாடு செய்திருந்தது.
இதில் கலந்து கொண்டு அமித் ஷா பேசியதாவது: பஹல்காமில் பாகிஸ்தான் ஆதரவு பெற்ற தீவிரவாதிகள் மதத்தை பற்றி கேட்டு சுற்றுலாப் பயணிகளை தாக்கினார்கள். இப்போது அவர்கள் (பாகிஸ்தான்) உணவு தானியங்களுக்கு ஏங்குவார்கள். உணவு தேவைக்காக அந்த நாடு வெளிநாடுகளிடம் கையேந்த வேண்டியிருக்கும்.