
மதுரை: ஆன்மிக மாநாட்டை அரசியலுக்குப் பயன்படுத்தினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம் என்று உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மதுரையில் வரும் 22-ம் தேதி நடைபெறும் முருக பக்தர்கள் மாநாட்டுக்கு 52 நிபந்தனைகளுடன் போலீஸார் அனுமதி வழங்கினர்.
இதில் 6 நிபந்தனைகளை மாற்றியமைக்க கோரி இந்து முன்னணி சார்பிலும், அறுபடை வீடுகள் அமைக்கக் கூடாது என்று மக்கள் கலை இலக்கியக் கழகம் மற்றும் அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கம் சார்பிலும் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் இடையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இவற்றை நீதிபதி பி.புகழேந்தி விசாரித்தார்.