
தூத்துக்குடி: தமிழகத்தில் கள் இறக்க அனுமதி கோரி தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே சீமான் பனை மரத்தில் ஏறி, கள் இறக்கி போராட்டத்தில் ஈடுபட்டார்.
சாத்தான்குளம் அருகேயுள்ள பெரியதாழையில் நேற்று நடைபெற்ற கள் இறக்கும் போராட்டத்தின்போது, கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பனை மரம் ஏறினார். பின்னர் கீழே இறங்கிய சீமான், அங்கு அமைக்கப்பட்டிருந்த மேடையில் நிர்வாகிகளுடன் பனையோலை பட்டையில் கள் அருந்தினார்.