
சென்னை: இடைநிற்றல் மாணவர்களை மீண்டும் அழைத்து வந்து பள்ளியில் சேர்க்கும் இயக்கத்தில் இணையுமாறு ஆசிரியர்கள், பொதுமக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
விருதுநகரில் பள்ளிக்கல்வியை தொடராமல் விட்டுவிடும் இடைநிற்றல் மாணவர்களை கண்டறிந்து, அவர்களை மீண்டும் அழைத்து வந்து பள்ளியில் சேர்க்கும் முயற்சியில் மாவட்ட ஆட்சியர் வீ.ப.ஜெயசீலன் ஈடுபட்டு வருகிறார். மாணவர்களுக்கு கல்வியின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். இதற்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.