• June 15, 2025
  • NewsEditor
  • 0

கொல்கத்தா: குஜ​ராத் மாநிலம் அகம​தா​பாத்​தில் விமான விபத்​தில் விமானப் பணிப் பெண்​கள் 2 பேர் உயி​ரிழந்​துள்​ளனர். அவர்​கள் இனக் கலவரத்​தால் பாதிக்​கப்​பட்​டுள்ள மணிப்​பூரைச் சேர்ந்த குகி மற்​றும் மைதேயி இனத்​தைச் சேர்ந்​தவர்​கள் என்​பது தெரிய வந்​துள்​ளது.

ஏர் இந்​தியா விமானத்​தில் மொத்​தம் 10 பணிப்​பெண்​கள் இருந்​துள்​ளனர். அவர்​களில் மணிப்​பூர் மாநிலத்​தின் குகி இனத்தை சேர்ந்த லாம்​நந்​தி​யம் சிங்​சன் மற்​றும் மைதேயி இனத்தை சேர்ந்த கந்​தோய் சர்மா காங்​பிரெய்​லாக்​பம் ஆகிய இரு​வரும் அடங்​கு​வர். இவர்​களும் விமான விபத்​தில் உயி​ரிழந்​தனர். அகம​தா​பாத்​தில் விமானம் விபத்​துக்​குள்​ளான தகவல் அறிந்​ததும் இவர்​களது குடும்​பத்​தினர் அதிர்ச்சி அடைந்​தனர். லாம்​நந்​தி​யம், கந்​தோய் இரு​வரும் உயி​ரிழந்த தகவல் அறிந்​தவுடன் சமூக அமைப்​பினர், மணிப்​பூர் மக்​கள் என அனை​வரும் தங்​கள் இன வேறு​பாட்டை மறந்து அந்​தக் குடும்​பத்​தினருக்கு இரங்​கல் தெரி​வித்​தனர். குகி – மைதேயி இனங்​களை மறந்து அரசி​யல் கட்​சி​யினரும் குடிமக்​களும் பல்​வேறு அமைப்​பினரும் ஆழ்ந்த இரங்​கல் தெரி​வித்​துள்​ளனர். அத்​துடன் சோக​மான இந்த நேரத்​தில் 2 குடும்​பத்​தினருக்​கும் ஆதர​வாக இருப்​போம் என்று தெரி​வித்​துள்​ளனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *