
திருச்சி: தமிழக அரசியலின் திசைவழியை விசிக தீர்மானிக்கும் என விசிக தலைவர் திருமாவளவன் எம்.பி. தெரிவித்தார்.
'மதச்சார்பின்மை காப்போம்' என்ற தலைப்பில் விடுதலைசிறுத்தைகள் கட்சி சார்பில் திருச்சியில் நேற்று பேரணி, பொதுக்கூட்டம் நடைபெற்றது. டிவிஎஸ் டோல்கேட்டில் தொடங்கிய பேரணியை கட்சியின் தலைவர் திருமாவளவன் தலைமை வகித்து தொடங்கி வைத்தார். பேரணியானது குட்ஷெட் பாலம், தலைமை அஞ்சல் அலுவலகம், ஒத்தக் கடை வழியாக மாநகராட்சி அலுவலகம் அருகில் நிறைவடைந்தது.