• June 15, 2025
  • NewsEditor
  • 0

திருச்செந்தூரில் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் வரும் ஜூலை 7-ம் தேதி குடமுழுக்கு நடைபெறவுள்ளது.  இந்த குடமுழுக்கு திருவிழாவை தமிழில் நடத்தக்கோரி  நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கோரிக்கை விடுத்து இருந்தார். இந்த நிலையில் தமிழில் குடமுழுக்கு விழா நடத்த கோரி பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் நாம் தமிழர் கட்சியினர் மற்றும் வீரத்தமிழர் முன்னணி தெய்வத்தமிழ் பேரவையை சேர்ந்தவர்கள், பிற அமைப்பைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.

சீமான்

இந்த பொதுக்கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டுப் பேசினார்.  அப்போது பேசிய அவர், “தமிழில் இருந்து கன்னடம் பிறந்தது என்று கூறிய உடன் கன்னடர்கள் பொங்கி எழுந்தனர். ஆனால் தமிழை விட்டு கொடுத்து பேசியபோது யாரும் பொங்கவில்லை என்பது வருத்தம். எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்று முதல்வர் சொல்கிறார். ஆனால் அது முற்று பெறவில்லை.

ஆனால் அது இருக்காது என்பது தான் திராவிடம். இந்த நிலப்பரப்பு முழுவதும் பரவி வாழ்ந்தவர்கள் நாங்கள் தமிழர்கள். ஒரே நேரத்தில் வழிபாட்டில் இருந்தும், வரலாற்றில் இருந்தும், மொழியில் இருந்தும் திட்டமிட்டு வெளியேறியவர்கள் இந்த இந்திய திராவிடர்கள்.குடமுழுக்கு என்று தமிழில் சொல்ல மாட்டார்கள். கும்பாபிஷேகம் என்று தான் கூறுவார்கள். பிறந்து சிறந்த மொழிகள் மற்றமொழி. சிறந்தே பிறந்த மொழி என் செம்மொழி.

சீமான்

எம்மொழி இறைவனால் பேசப்பட்டது. இறையனார் சிவனே தந்த மொழி தமிழ்.  76 குண்டம் ஏற்றி இந்த குடமுழுக்கு விழாவை நடத்த இருக்கிறார்கள். ஒரே ஒரு குண்டத்தில் தமிழில் சொல்லுங்கள் என்று சொன்னால் ஏற்க மறுக்கிறார்கள்.  திருச்செந்தூர் முருகனுக்கு தமிழில் குடமுழுக்கு நடத்த வேண்டும். இல்லை என்றால், எங்களை தமிழ் மொழியில் குடமுழுக்கு நடத்த அனுமதிக்க வேண்டும்.

 இல்லை என்றால் திருச்செந்தூர் கோயிலை முற்றுகை இடுவோம். தமிழ்நாட்டு போலீஸார்  முழுவதையும் திருச்செந்தூரில் குவிக்க வேண்டிய நிலை வரும். இதை பேரறிவிப்பாக நினைத்து தமிழ் மீதும் நம் இனம் மீதும் அக்கறை கொண்ட எம் மக்கள்  7-ம் தேதி தமிழில் குடமுழுக்கு நடத்த தவறினால் திருச்செந்தூர் நம்முடைய கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும். பேருந்து வரவில்லை என்றால் கட்டு சோறை கட்டிக்கொண்டு வந்துவிடு.

சீமான்

நான் முதல் நாளே இங்கு வந்து விடுவேன். உங்களுக்காக காத்திருக்கிறேன். நம்முடைய மறை ஓதும் அடிகளாரோடு காத்திருப்பேன். திருமுருகாற்றுப்படை திருப்புகழை தெருவில் இருந்து முருகனுக்காக பாடுவோம். கோரிக்கை ஏற்கப்பட்டால் வழிபடுவோம். விடுபட்டால் ஒன்று கூடுவோம். தமிழின் குடமுழுக்கு. இல்லையேல் திராவிடத்துக்கு தலைமுழுக்கு. முருகா வேலோடு வா. நான் தமிழோடு வருகிறேன். விளையாடி பார்ப்போம்” என்றார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *