
அகமதாபாத் விமான விபத்து, இஸ்ரேல்-ஈரான் போர் ஆகியவற்றால் இந்திய விமானப் போக்குவரத்துத் துறைக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால், விமானப் பயணக் கட்டணங்கள் உயரும் ஆபத்து உருவாகியுள்ளது.
இஸ்ரேல் – ஈரான் இடையிலான போரால் அவற்றின் வான்வெளி மூடப்பட்டுள்ளது. இதனால் விமானங்கள் சுற்றிச் செல்ல வேண்டியிருப்பதால் ஏர் இந்தியா உட்பட உலகின் பல விமான நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. பல்வேறு விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் லண்டன், துபாய், அபுதாபி, ரியாத், பிராங்பர்ட் போன்ற விமான நிலையங்களில் ஆயிரக்கணக்கான பயணிகள் சிக்கித் தவிப்பதாக கூறப்படுகிறது.