• June 15, 2025
  • NewsEditor
  • 0

அறிமுக இயக்குநர் அன்பு  இயக்கத்தில், மறைந்த நடிகர் விஜயகாந்தின் மகனான சண்முக பாண்டியன் நடிப்பில் வெளியாகி இருக்கும் திரைப்படம் ‘படைத்தலைவன்’. 

இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்திருக்கிறார். இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பில் சண்முக பாண்டியன் பேசிய விஷயங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

படைத்தலைவன் படத்தில் சண்முக பாண்டியன்

“இப்படத்தின் முதல்காட்சியில் அப்பாவைப் பார்க்கும்போதே நான் அழுதுவிட்டேன். அப்பா எங்களுடன் இல்லாதது கஷ்டமாகத் தான் இருக்கிறது.

ஆனால் அவர் மேல் இருந்து எங்களுக்கு ஆசிர்வாதத்தைத் தருகிறார் என்ற நம்பிக்கையில் தொடர்ந்து பயணித்துக் கொண்டிருக்கிறோம். அப்பாவுடைய பாடலை எல்லோரும் யூஸ் பண்ணிக்கொண்டு இருக்கிறார்கள்.

அதேபோல ‘நீ பொட்டு வெச்ச’ பாடலை ‘லப்பர் பந்து’ படம் வெளியாவதற்கு முன்பே இந்தப் படத்தில் நாங்கள் வைத்துவிட்டோம். நிறையப் பிரச்னைகளால் படம் தள்ளிப்போனதால் எங்களுடையது முதலில் வரவில்லை.

இந்தப் பாடலை பயன்படுத்துவதற்கு முன்பு அப்பாவிடம் கேட்டோம். அப்பா சரி என்று சொன்னப்பிறகு தான் அந்தப் பாடலை இந்தப் படத்தில் வைத்தோம். அம்மாவுக்கு படம் ரொம்ப பிடித்திருக்கிறது. எமோஷனல் ஆகிவிட்டார்கள்.

சண்முக பாண்டியன்
சண்முக பாண்டியன்

அம்மாவுக்கு நான் நடிக்க வேண்டும் என்பது ஆசை. ஆனால் அப்பாவுக்கு உடல்நிலை சரியில்லாததால் அவருடன் இருக்கவேண்டிய நிலை இருந்தது. அதனால் என்னால் நடிக்க முடியவில்லை. ரொம்ப வருடங்கள் கழித்து என்னைத் திரையில் பார்த்ததால் அழுதுவிட்டார்கள்” என்று கூறியிருக்கிறார்.           

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *