
தனது தாய் எப்போது வருவார் என்று அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்த விமானப் பணிப்பெண்ணின் மகள் காத்திருக்கும் செய்தி பலரது கண்ணில் கண்ணீரை வரவழைத்துள்ளது.
குஜராத் மாநிலம் அகமதாபாத்திலிருந்து கடந்த 3 நாட்களுக்கு முன்பு லண்டன் புறப்பட்ட போயிங் விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே விழுந்து நொறுங்கியது. இதில் விமானத்தில் பயணித்த 241 பேர், பிஜே மருத்துவக் கல்லூரி வளாகத்தில் இருந்த 33 பேர் என மொத்தம் 274 பேர் உயிரிழந்தனர். விமானத்தில் பயணித்த விஸ்வாஸ் குமார் என்ற நபர் மட்டும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.