
சென்னை: தமிழகம் முழுவதும் நேற்று நடந்த லோக் அதாலத் வாயிலாக 1.12 லட்சம் வழக்குகளுக்குத் தீர்வு காணப்பட்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.631 கோடியே 80 லட்சத்து 27,703 நிவாரணம் கிடைத்துள்ளது.
நாடு முழுவதும் உள்ள நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைவாக முடிவுக்கு கொண்டுவரும் வகையில், ஆண்டுக்கு நான்கு முறை தேசிய லோக் அதாலத் என்ற மக்கள் நீதிமன்றம் நடத்தப்படுகிறது. அதன்படி, தமிழகத்தில் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஆர்.ராம் மேற்பார்வையில், தமிழ்நாடு சட்டப்பணி ஆணைக்குழு தலைவர் நீதிபதி ஆர்.சுப்பிரமணியன் வழிகாட்டுதல் பேரில் நடந்தது. சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் பி.பி.பாலாஜி, வி.லட்சுமி நாராயணன், பி.தனபால், முன்னாள் நீதிபதிகள் எம்.