
சென்னை: ‘உடன்பிறப்பே வா’ சந்திப்பின் முதல் நாளில் சிதம்பரம், விழுப்புரம், உசிலம்பட்டி தொகுதி நிர்வாகிகளிடம், மாவட்டச் செயலாளர்களின் செயல்பாடுகளை முதல்வர் மு.க. ஸ்டாலின் கேட்டறிந்ததுடன், அனைவரும் இணைந்து தேர்தல் வெற்றிக்கு உழைக்கும்படி அறிவுறுத்தினார்.
தமிழக சட்டப்பேரவைக்கு அடுத்தாண்டு பொதுத்தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி திமுக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.